திருநெல்வேலி மாவட்ட வள்ளியூர் கிளையின் கிளைக் கூட்டம்
வணக்கம் தோழர்களே,
வள்ளியூர் கிளையின் கிளைக் கூட்டம் 02-10-2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட உதவி செயலாளர் தோழர் R. M. கிறிஸ்டோபர் இல்லம், திசையன்விளையில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர். I. ஜெபமணி தலைமை தாங்கினார். கிளைச் செயலர் தோழர். A.பிச்சுமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர் S.முத்துசாமி மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார். தோழர் S.நடராஜா, மாநில உதவி தலைவர், மாவட்டச் செயலாளர் NCCPA மற்றும் FCPA கமிட்டி உறுப்பினர் சிறப்புரையாற்றினார்.
தோழர் M.கனகமணி, மாவட்ட தலைவர், தோழர் S.சங்கரநாராயணன், மாவட்ட பொருளாளர், தோழர் R. M.கிறிஸ்டோபர், மாவட்ட உதவி செயலாளர், தோழர் S.மைக்கேல் செல்லத்துரை, மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் தோழர் P.சூசை, பாளையங்கோட்டை கிளைச் செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சில தோழர்கள் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். தோழர்களின் கேள்விகளுக்கு மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார்.
2025 டிசம்பர் 17 & 18 தேதிகளில் கோயாமுத்தூரில் நடக்கவிருக்கும் நமது அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது. உடனே மாவட்ட உதவி செயலாளர் தோழர் R.M. கிறிஸ்டோபர் ரூபாய் 2000/= , மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் S.மைக்கேல் செல்லத்துரை ரூபாய் 2000/=, வள்ளியூர் கிளைச் செயலாளர் தோழர் A.பிச்சுமணி ரூபாய் 2000/=, கிளை தலைவர் தோழர் I.ஜெபமணி ரூபாய் 2000/= கிளை பொருளாளர் தோழர் ஞானபாக்கியராஜ் ரூபாய் 2000/=தோழர் ராமக்கனி ரூபாய் 1000/=, தோழர் மைக்கேல் சிலுவை ரூபாய் 1000/= நன்கொடை வழங்கினர்.
மொத்தம் நன்கொடை ரூபாய் 12,000/=(ரூபாய் பன்னிரண்டு ஆயிரம்) வசூல் செய்து வள்ளியூர் கிளை சாதனை படைத்தது.
இந்த சிறப்பு வாய்ந்த கிளைக்கூட்டத்தை தனது இல்லத்தில் நடத்த அனுமதி கொடுத்த மாவட்ட உதவி செயலாளர் தோழர். R. M. கிறிஸ்டோபர் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. நிறைவாக கிளை பொருளாளர் தோழர். ஞானப்பாக்கியராஜ் நன்றி கூறினார்.
*A. பிச்சுமணி,*
கிளைச் செயலர்,
வள்ளியூர் கிளை,
திருநெல்வேலி மாவட்டம்.
02-10-2025.
0 Comments