சிறப்பாக நடைபெற்ற சேலம் மாவட்டம் ராசிபுரம் கிளை மாநாடு !!
October 22, 2023
AIBDPA சேலம் மாவட்டம் ராசிபுரம் கிளை மாநாடு - 22.10.2023 -இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ராசிபுரத்தின் கிளை மாநாடு இன்று 22-10-2023ல் தோழர் T. பழனி ACS அவர்கள் மாநாட்டை துவக்கி வைக்க, தோழர்கள் K. ராஜன் DP TNTCWU, P.தங்கராஜு Sr.Com, S.தமிழ்மணி DS, S.அழகிரிசாமி ADS, P.சம்பத் BS MEY, P.செல்வம் ADS BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
ஆண்டறிக்கையை கிளைச் செயலர் P.M.ராஜேந்திரன் அவர்களும், வரவு செலவு கணக்கினை P.A.ஆறுமுகம் அவர்களும் சமர்ப்பித்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று, தோழர்கள் S.விசுவாசராஜூ, P.M.ராஜேந்திரன், P.A.ஆறுமுகம் ஆகியோர் கிளை தலைவர், கிளைச்செயலர், பொருளாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர் P.A.ஆறுமுகம் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.
0 Comments