AIBDPA சென்னைமாவட்டச் சங்கத்தின் பொதுக்குழுகூட்டம்
October 03, 2022
AIBDPA சென்னை மாவட்டச் சங்கத்தின் பொதுக்குழுகூட்டம்
வணக்கம் தோழர்களே!
சென்னை மாவட்ட சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (03-10-2022) காலை 11 மணிக்கு சென்னை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் வைத்து தோழர். M. அப்துல்பாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தோழர். V. சுப்பிரமணியன் அவர்கள் அஞ்சலி உரையாற்றினார். தோழர். T. கோதண்டம் மாவட்ட செயலாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலை ஒப்புதல் வேண்டி முன் வைத்து பேசினார்.
நிகழ்ச்சிநிரல் 1 ) டெல்லி பேரணி- 24-08-2022 2) மாநில செயற்குழு மதுரை முடிவுகள் -22-09-2022 3) BSNL MRS பிரச்சினைகள், நன்கொடை 4) அகில இந்திய மாநாடு டிசம்பர் 20 மற்றும் 21- 2022 மைசூர் A) சார்பாளர் தேர்வு B) அகில இந்திய மாநாடு நன்கொடை 5 ) சொசைட்டி பிரச்சினைகள் 6 )தலமட்ட பிரச்சினைகள் 7 ) கிளைகள் அமைப்பது குறித்த தற்போதைய நிலை 8) BSNL உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் 12-10-2022 9) 21-10-2022 AIBDPA அமைப்பு தினம்
தோழர்.R.ராஜசேகர் மாநில செயலாளர் அவர்கள் பொதுக்குழு வினை துவக்கி வைத்து உரையாற்றினார். அவரது உரையில் டெல்லி பேரணி வெற்றி, மதுரை மாநில செயற்குழு முடிவுகள், மெடிக்கல் பில் மற்றும் அலவன்ஸ் பட்டுவாடா நமது முயற்சிகளும் நமது வெற்றிகளும், அகில இந்திய மாநாடு நமது பணிகள், சொசைட்டி நமது போராட்டங்கள், BSNL உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU வெற்றி பெற நாம் செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
வாழ்த்துரையில் தோழர். C.K. நரசிம்மன் மாநில தலைவர் AIBDPA, தோழர். P. ராஜு மாநில செயலாளர் BSNLEU, தோழர். S. நடராஜா மாநில பொருளாளர் AIBDPA, ஆகியோர் நாம் செய்ய வேண்டிய பல்வேறு உடனடியான பணிகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சி நிரலின் மீது பல தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் தெரிவித்தனர். இறுதியாக கீழ்க்கண்ட முடிவுகள் ஒரு மனதாக எடுக்கப்பட்டது.
முடிவுகள்
1) அகில இந்திய மாநாட்டு நன்கொடை ரூபாய் 100/= கண்டிப்பாக அனைத்து உறுப்பினர்களிடமும் வசூல் செய்வது. 2) அகில இந்திய மாநாட்டு சார்பாளர்களாக மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மாநில சங்க நிர்வாகிகள் சார்பாளர்களாக கலந்து கொள்வதோடு இன்னும் சில தோழர்களை சார்பாளர்களாகவோ பார்வையாளர்களாகவோ கலந்து கொள்ள மாநில சங்கத்தின் மூலமாக முயற்சி செய்வது. 3) உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU சங்கத்திற்கு ஆதரவாக விளம்பரம் மற்றும் நிதி உதவிகள் செய்வது மேலும் சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில் BSNLEU சங்கத்திற்கு வாக்கு கேட்டு ஒரு டிஜிட்டல் பேனர் வைப்பது அதன் முழு செலவையும் நன்கொடையாக தோழர். K.V. சிவகுமரன் மாவட்ட பொருளாளர் ஏற்றுக் கொண்டமைக்காக பொதுக் குழு பாராட்டு தெரிவித்து கொள்கிறது. மேலும் சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU சங்கத்திற்கு ஆதரவாக அனைத்து இயக்கங்களிலும் நமது தோழர்கள் திரளாக கலந்து கொள்வது.
குறிப்பாக 06-10-2022 அன்று மதியம் தோழர். P.அபிமன்யூ பொதுச் செயலாளர் BSNLEU அவர்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் கூட்டம்
மற்றும் 07-10-2022 அன்று காலை நடைபெறும் ஊழியர்கள் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் நாம் பெரும் திரளாக கலந்து கொள்வது.
4) மெடிக்கல் பில் பட்டுவாடா மற்றும் அலவன்ஸ் பிரச்சினைகள் தீர்க்க மத்திய மாநில சங்கங்களின் முயற்சிகளை பாராட்டி பலர் நன்கொடை வழங்கினார்கள் அவர்களுக்கும் இன்னும் நன்கொடை வழங்க உள்ள ஏனைய தோழர் களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மெடிக்கல் பிரச்சினையில் தீர்வு ஏற்படாத தோழர்களுக்கு தனியாக நிர்வாகத்துடன் சந்தித்து தீர்த்து வைப்பது. 5) சொசைட்டி பிரச்சினையில் ஊழியர்களுக்கு அவர்களது பணத்தினை பெற்றுத்தர மாநில சங்கத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் மாவட்ட சங்கம் ஆதரவு தெரிவித்து கொள்கிறது. 6 ) சென்னை மாவட்டத்தில் புதிய கிளைகள் உறுவாக்கத்தை அக்டோபர் மாத இறுதிக்குள் செய்து முடிப்பது. 7 ) மெடிக்கல் பட்டுவாடா பிரச்சினை யில் மத்திய மாநில சங்கங்களின் செயல் பாட்டை பாராட்டி மத்திய மாநில சங்கங்களுக்கு தலா ரூபாய் 5000/= (ஐயாயிரம்) நன்கொடை முதல் தவணையாக வழங்குவது.
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பொருளாளர் தோழர். K.V.சிவகுமாரன் அவர்கள் நன்றி கூறியதோடு கூட்டம் நிறைவுற்றது.
நமது ஒன்றுபட்ட முயற்சிகள் நிச்சயம் நமக்கு தொடர் வெற்றிகளை பெற்று தரும் !!
0 Comments