சிறப்பாக நடைபெற்ற AIBDPA குமரி மாவட்டச் சங்க விரிவடைந்த செயற்குழு கூட்டம்
October 05, 2022
சிறப்பாக நடைபெற்ற AIBDPA குமரி மாவட்டச் சங்க விரிவடைந்த செயற்குழு கூட்டம் !!
தோழர்களே !
நாகர்கோவில் AIBDPA வின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவில் தொலைபேசி நிலைய வளாகத்தில் உள்ள BSNLEU சங்க அலுவலகத்தில் வைத்து 27-09-2022 காலை 11மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர். A. மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவி செயலாளர் தோழர். B. கணபதியாபிள்ளை வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.
மாநில உதவி தலைவர் தோழியர் P. இந்திரா செயற்குழு கூட்டத்தில் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தோழர். K. ஜார்ஜ் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து மாவட்டச் சங்க பணிகளை விளக்கி கூறினார்.
BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் R.சுயம்புலிங்கம், TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் A.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அகில இந்திய உதவி செயலாளர் (BSNL CCWF) தோழர். C. பழனிச்சாமி நிறைவுரை வழங்கினார்.
செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.Medical allowance, Medical bills பட்டுவாடா செய்வதில் முழு ஒத்துழைப்பு தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள். உறுப்பினர்களிடம் நன்கொடை பெறுவது என்றும் உறுப்பினர் சந்திப்பு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 2. Pension மாற்றம் மருத்துவ பில் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக ஆர்ப்பாட்டம் தர்ணாவில் கலந்து கொண்ட தோழர்களுக்கும் டெல்லி பேரணியில் கலந்து கொண்ட தோழர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் மாவட்ட சங்கம் சார்பில் நன்றி. 3. மருத்துவ Allowance மற்றும் பில் பிரச்சினை தீர்வுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ரூபாய் 1,37,69,082/- செய்ய உதவி புரிந்த மாநில சங்கத்துக்கு பாராட்டுகள். 4.நமது மாவட்டத்தில் WhatsApp குழுமம் AIBDPA NAGERCOIL SSA என்ற பெயரில் இனி இயங்கும் இதில் Admin களாக மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், மாநில உதவி தலைவர், மாவட்ட உதவி செயலாளர் ( C.பழனிச்சாமி), மாநில செயலாளர் இருப்பது என்று முடிவு 5.Executive member களுக்காக ஒரு WhatsApp குழுமம் துவங்கப்படும் இந்த குழுமத்தில் Executive member கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் 6. BSNL அங்கீகார தேர்தலில் BSNLEU க்கு வேண்டி அனைத்து உதவிகளையும் செய்வது என்றும் முடிவு 7.அகில இந்திய மாட்டில் நமது மாவட்டம் சார்பில் சார்பாளர்கள் பங்கு எடுப்பது என்று முடிவு 8. அவசர நிலையில் மாவட்ட மையத்தை கூட்டுவது என்றும் மாவட்ட மையத்தில் தலைவர் செயலர் பொருளாளர் மாநில உதவி தலைவர் மாவட்ட உதவி செயலாளர் (C.பழனிச்சாமி ) மற்றும் இரண்டு கிளை செயலர்கள் பங்கு எடுப்பது என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.
நமது மத்திய சங்கத்தின் தொடர் போராட்டங்களின் விளைவாக மெடிக்கல் அலவன்ஸ், நிலுவையில் இருந்த மெடிக்கல் பில்கள் பட்டுவாடா ஆகி வருகிறது. மேலும் மைசூரில் டிசம்பரில் நடைபெறும் அகில இந்திய மாநாடு சம்பந்தமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட சங்கத்தின் நிதிநிலமை மிகவும் மோசமாக இருப்பதால் இந்த சமயத்தில் மெடிக்கல் தொகை கிடைக்க பெற்ற தோழர்கள் மனமுவந்து நன்கொடை தந்திட வேண்டுகோள் விடப்பட்டது.
மாவட்ட செயற்குழு கூட்டத்திலேயே கீழ்க்கண்ட தோழர்கள் நன்கொடை வழங்கினார்கள். நன்கொடை வழங்கிய
தோழர்கள்
Aஹரிஹரன்
Bகணபதிப்பிள்ளை
S செல்வராஜ்
M கங்காதரன்
S அஜய் குமார்
V மாதவன் நாயர் B சுப்பிரமணியன் T பிரகாஷ் சுந்தரேசன் C V சந்திரசேகரதாஸ் G செல்லசாமி R ஹரிகுமார்
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நமது சங்கத்தில் தோழியர் Srikumari w/o Late Krishnan Kottar ஆயுள் கால உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மாவட்ட பொருளாளர் தோழர். B. சுப்பிரமணியன் நன்றி உரை கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.
0 Comments