Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளை பொதுக்குழு

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளை பொதுக்குழு கூட்டம்

  




வணக்கம் தோழர்களே !!

              தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளைச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 29.09.2022 வியாழன் அன்று காலை 1045 மணியளவில் கோவில்பட்டி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர் C. மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளை உதவிச் செயலர் தோழர். பரமசிவம் அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலர் தோழர்.P. முத்துராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள். S.கோலப்பன் K. சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  




               மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் துவக்க உரை ஆற்றினார். அவர் தனது துவக்க உரையில் மத்திய மாநிலசங்க அறைகூவல்கள், நடைபெற்ற இயக்கங்கள், டெல்லி பேரணியும் அதனால் அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற மெடிக்கல் பில் மற்றும் மெடிக்கல் அலவன்ஸ் விபரங்களை எடுத்து கூறினார். 22.9.2022ல் மதுரையில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகளை விளக்கமாக கூறினார். BSNLலில் நடைபெறும் 9 வது Non-executive சங்க அங்கிகார தேர்தலில் BSNLEU வெற்றி பெற அனைவரும் பாடுபட கேட்டுக்கொண்டார். சொசைட்டி சம்பந்தமாகவும் தல மட்ட பிரச்சினைகளும்விவாதிக்கப்பட்டன. சில தோழர்கள் KYP விண்ணப்பங்களை வழங்கினர். கூட்டத்தில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் பதில் கூறினார்.

 



        பின்னர் அகில இந்திய உதவித் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் சிறப்பான மத்திய மாநில சங்க செயல்பாடுகள், அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத செயல்பாடுகளை விரிவாக கூறினார். 2022 டிசம்பர் 20, 21ல் மைசூரில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாடு, சார்பாளர் கட்டண விபரங்கள், சார்பாளர் எண்ணிக்கை, 9 வது Non-executive சங்க அங்கிகார தேர்தலில் நமது ஆதரவை வழங்க வேண்டிய அவசியம், அக்டோபர் 1 உலக மூத்தோர் தினம் கொண்டாடுவது, AIBDPA 14வது அமைப்பு தினத்திற்கு நமது ஏற்பாடுகள் என அனைத்து விபரங்களையும் கூறினார். இயக்கங்களை சிறப்பாக நடத்தியதால் ஏற்பட்ட செலவினத்தை முன்வைத்து மாநிலச் சங்கம் கேட்டுக்கொண்ட அடிப்படையில் தோழர். S. மோகன்தாஸ் அவர்கள் ரூபாய். 1,000/- நன்கொடையாக மாவட்டச் செயலரிடம் வழங்கினார்

          மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். K. கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.  கிளை பொருளாளர் தோழர். திருவட்டாபோத்தி நன்றி கூறினார். மாநில மாநாட்டு வரவேற்புக்குழு நினைவு பரிசாக பேக் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments