சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளை பொதுக்குழு கூட்டம்
வணக்கம் தோழர்களே !!
தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளைச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 29.09.2022 வியாழன் அன்று காலை 1045 மணியளவில் கோவில்பட்டி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர் C. மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளை உதவிச் செயலர் தோழர். பரமசிவம் அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலர் தோழர்.P. முத்துராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள். S.கோலப்பன் K. சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் துவக்க உரை ஆற்றினார். அவர் தனது துவக்க உரையில் மத்திய மாநிலசங்க அறைகூவல்கள், நடைபெற்ற இயக்கங்கள், டெல்லி பேரணியும் அதனால் அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற மெடிக்கல் பில் மற்றும் மெடிக்கல் அலவன்ஸ் விபரங்களை எடுத்து கூறினார். 22.9.2022ல் மதுரையில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகளை விளக்கமாக கூறினார். BSNLலில் நடைபெறும் 9 வது Non-executive சங்க அங்கிகார தேர்தலில் BSNLEU வெற்றி பெற அனைவரும் பாடுபட கேட்டுக்கொண்டார். சொசைட்டி சம்பந்தமாகவும் தல மட்ட பிரச்சினைகளும்விவாதிக்கப்பட்டன. சில தோழர்கள் KYP விண்ணப்பங்களை வழங்கினர். கூட்டத்தில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் பதில் கூறினார்.
0 Comments