Latest

10/recent/ticker-posts

AIBDPA நெல்லை மாவட்டச் சங்க விரிவடைந்த செயற்குழு கூட்டம்

AIBDPA நெல்லை மாவட்டச் சங்க விரிவடைந்த செயற்குழு கூட்டம்

  



வணக்கம் தோழர்களே !

     24/09/2022 அன்று காலை 10.30 மணியளவில் நமது AIBDPA நெல்லை மாவட்டச் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் தோழர் M. கனகமணி தலைமையில் திருநெல்வேலி தியாகராஜநகர், EB Office CITU கட்டிடத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

            மாவட்ட உதவிச் செயலர் தோழர் S. சங்கரநாராயணன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்ட அமைப்புச் செயலர் தோழியர் J. மரியசுந்தரம் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர் S. முத்துசாமி துவக்க உரையாற்றினார்.

       டெல்லி பேரணியால் நமது கோரிக்கைகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு மத்திய சங்கத்திற்கும் மற்றும் மாநிலச் சங்கத்திற்கும் பாராட்டுதலும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.

    நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார்.



 

           கல்கத்தாவில் நடைபெற்ற 3வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட நமது தோழர்கள் அனைவருக்கும் தங்குவற்கும் சுற்றுலா செல்லவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து உறுதுணையாக இருந்து உதவி செய்த தோழர் S.தங்கசாமி மாவட்ட உதவித் தலைவர் அவர்களுக்கும், டெல்லி பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற நமது தோழர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்கும் இடம் வசதி செய்து கொடுத்த நமது தோழியர் J.மரிய சுந்தரம் மாவட்ட அமைப்புச் செயலாளர் அவர்களுக்கும் நமது அகில இந்திய துணைத் தலைவர் *தோழர் S.மோகன்தாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

             மாநில உதவிச் செயலர் தோழியர் V. சீதாலட்சுமி மற்றும் மாவட்ட உதவித் தலைவர் தோழர் C.சுவாமிகுருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

       அதைத் தொடர்ந்து வள்ளியூர், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை கிளைகளில் உள்ள பொறுப்பாளர்கள் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தீர்மானங்கள்:-
—————————
1. நமது டெல்லி பேரணிக்கு கிடைத்த வெற்றியின் பலனாக இப்போது அனைவருக்கும் மெடிக்கல் பில்/அலவன்ஸ் payment ஆகிக் கொண்டிருக்கிறது.ஆகவே தோழர்கள் அனைவரும் கிளைகள் மற்றும் மாவட்டச் சங்கத்தின் நிதியினைப் பலப்படுத்த தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்.

2.நமது Union Office வாடகை கொடுக்க ஒவ்வொரு உறுப்பினரும் தலா ரூபாய் 250 நன்கொடை வருடத்திற்கு மாவட்டச் சங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்று 22-06-2022 அன்று நடைபெற்ற செயற்குழுவில் எடுத்த முடிவின் படி இன்னும் கொடுக்காத தோழர்கள் உடனே நன்கொடை வழங்க வேண்டும்.

3.நமது சங்கத்தின் *அகில இந்திய மாநாடு 2022 டிசம்பர்* *20 மற்றும் 21 ம் தேதிகளில்* மைசூரில் நடைபெறவுள்ளது.
அந்த மாநாட்டில் கலந்து கொள்ள நமது மாவட்டத்திற்கு 5 சார்பாளர்கள் கலந்து கொள்ளலாம்.சார்பாளர்கள் கட்டணம் ரூபாய் 1500/= கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2022 நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளரிடம் பெயர் கொடுக்க வேண்டும்.5 க்கும் மேல் சார்பாளர்கள் வரும் பட்சத்தில் வயது மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள்.

அகில இந்திய மாநாட்டிற்கு உறுப்பினர்கள் தலா ரூபாய் 100/= நன்கொடை வழங்க வேண்டும்.

4. 22-09-2022 அன்று மதுரையில் நடைபெற்ற நமது சங்கத்தின் செயற்குழு வின் முடிவின் படி WhatsApp Group ஐ முறைப்படுத்துவது எனவும் இனி நமது மாவட்டத்திற்கு *AIBDPA TVL DIST* என்ற Group மட்டும் இருக்கும்.அந்த Group ல் மாவட்ட தலைவர், மாவட்ட செயலர், மாவட்ட பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் மட்டுமே Admin ஆக இருப்பர் மற்ற Group கள் நீக்கப்படும்.

5 . புதிய கிளைகள் துவக்கப்பட்டு கிளைகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.புதிய உறுப்பினர் சேர்க்கை முயற்சியில் ஈடுபட வேண்டும்.

6. Member ship Register Maintain பண்ண வேண்டும்.

7. 2022 அக்டோபர் 12 ல் நடைபெறவிருக்கும் BSNLEU சங்க அங்கிகாரத் தேர்தலில் BSNLEU சங்கத்தை 50% க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக வருவதற்கு நாம் பாடுபட வேண்டும்.

8. STR / STP பகுதியில் வராமல் இருக்கும் Medical Bill/Allowance payment ஐ பெற்றுத்தர முயற்சி செய்ய வேண்டும்.

     நிறைவாக பாளையங்கோட்டை கிளைச் செயலர் *தோழர் P.சூசை* நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments