14-09-2022 AIBDPA தமிழ் மாநிலச் சங்க மையக் கூட்டத்தின் முடிவுகள்
September 15, 2022
14-09-2022 AIBDPA தமிழ் மாநிலச் சங்க மையக் கூட்டத்தின் முடிவுகள்
தோழர்களே வணக்கம் ! 14-09-2022 அன்று நமது AIBDPA சங்கத்தின் மையக்கூட்டம் நடைபெற்றது.
தோழர்கள் சி.கே . நரசிம்மன் மாநில தலைவர், ஆர்.ராஜசேகர் மாநில செயலாளர், எஸ்.நடராஜா மாநில பொருளாளர், பி.மாணிக்கமூர்த்தி மாநில துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
மாநில சங்கத்திற்கு தொடர்ந்து பல மாவட்டங்களில் இருந்து மெடிக்கல் பில் பட்டுவாடா, மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் இண்டோர் டிரீட்மண்ட் பணம் செலுத்துதல் குறித்தும், ERP யில் ஏற்றுவது குறித்தும் பல்வேறு சந்தேகங்களும் பிரச்சினைகளும் வருவதாகவும் சில மாவட்டங்களில் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் மாநில அளவில் தலையீடு உடனடியாக அவசிமானது என்றும் பல மாவட்டங்கள் கேட்டுக் கொண்டன.
அதன் அடிப்படையில் உடனடியாக மாநில மையம் கூட்டப்பட்டு எந்த எந்த மாவட்டங்களில் எந்த மாதிரி பிரச்சினை என்பதை விரிவாக விவாதிக்கப்பட்டது
நிர்வாகத்துடன் பேட்டி
அதன் அடிப்படையில் உடனடியாக DGM (FINANCE) அவர்களை மையத்தில் இருந்த நிர்வாகிகள் சந்தித்து பிரச்சினைகள் உள்ள மாவட்டங்கள் குறித்தும், சில மாவட்டங்களில் ஒரு ஒத்துழைப்பு இல்லாத போக்கும் உள்ளதையும், இன்னும் பணியே துவங்காத மாவட்டம் பற்றியும் விரிவாக எடுத்து கூறினோம். அவைகளை சரிசெய்ய உடனடியான நிர்வாகத்தின் தலையீடு அவசியம் என்றும் வலியுறுத்தி கூறினோம்.
நிர்வாகம் அவைகளின் மீது விரைவான தலையீடும் அவற்றை சரி செய்வதற்கான உடனடியான முயற்சியும் இருக்கும் என்று உத்தரவாதம் அளித்தது.
தோழர்களே! மாவட்டங்களில் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். நமது நியாயமான பணம் முறையாக முழுமையாக விரைவாக அனைவருக்கும் கிடைக்க நாம் தொடர்ந்து முயற்சி செயாவோம்.
தேவைப்படின் மீண்டும் நாம் PGM (FINANCE) அவர்களையும் சந்திப்போம்.
மெடிக்கல் பில் பட்டுவாடா பிரச்சினையில் மாவட்டங்களில் உடனடியாக நிர்வாகத்தை சந்தித்து பணிகள் நல்ல முறையில் நடக்க முயற்சிகள் செய்த அனைத்து மாவட்ட சங்கங்களையும் மாநில மையத்தின் சார்பில் வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்.
நமது தொடர் முயற்சிகளும் போராட்டங்களும் நிச்சயம் வெற்றியைத் தருகிறது .
தோழமையுடன், ஆர்.ராஜசேகர் , மாநில செயலாளர், AIBDPA, தமிழ் மாநிலம். 14-09-2022
0 Comments