AIBDPA திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கிளையின் கிளைக் கூட்டம் 13-09-2022 செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு தென்காசி Co-axial building வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. தோழர். R. ராமநாதன் கிளைத் தலைவர் தலைமை தாங்கினார். தோழர் K.கணேசன் கிளைச் செயலாளர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர். M. முருகேசன் கிளை அமைப்புச் செயலர் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயலர் தோழர் S. முத்துசாமி கிளைக் கூட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை ஆற்றினார். மாவட்ட உதவித் தலைவர்கள் தோழர் C . சுவாமிகுருநாதன், தோழர் S.தாமஸ், சங்கரன்கோவில் கிளைப் பொருளாளர் தோழர் V. ராமநாதன் மற்றும் வள்ளியூர் கிளைச் செயலர் தோழர் A.பிச்சுமணி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல தோழர்கள் அமைப்புநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். மாவட்டச் செயலர் தோழர் S. முத்துசாமி அதற்கான விளக்கங்களை அளித்தார்.
புதிய உறுப்பினர்களாகத் தோழர் நடராஜன் மற்றும் தோழர் வேல்ச்சாமி ஆகியோர் நமது AIBDPA சங்கத்தில் இணைந்துள்ளனர். மேற்கண்ட தோழர்கள், தோழர் யோவண்ணன் மற்றும் மறைந்த தோழர் கண்ணதாசன் அவர்களின் தாயார் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. புதிதாக இணைந்த உறுப்பினர்களை வருக! வருக!! என இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறோம்.
கிளைப் பொருளாளர் தோழர் S. ராமசுப்பு அவர்களுக்கு இன்று (13-09-2022 ) பிறந்த நாள். அதை முன்னிட்டு மதியம் உணவு அவர் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்துத் தோழர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். மாவட்டச் சங்கம் சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
0 Comments