Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட - பொள்ளாச்சி கிளை மாநாடு !

சிறப்பாக நடைபெற்ற கோவை – பொள்ளாச்சி கிளை மாநாடு !

  




               கடந்த 29-09-2021 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வைத்து பொள்ளாச்சி கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. தோழர். V. சசிதரன் தலைமை தாங்கினார். தோழர். பெரியசாமி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலியை தோழர். K. நடராஜன் செலுத்தினார். தோழர் P.சிவசாமி கிளை செயலர் வந்தாரை வரவேற்றார்.

      கோவை மாவட்ட மாவட்டச் செயலாளர் தோழர். V. வெங்கட்ராமன் மாநாட்டை துவக்கி வைத்தார். நமது சங்கத்தின் அகில இந்திய துணை பொருளாளர் தோழர். K. பங்கஜவல்லி, பொள்ளாச்சி நகர ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் தோழர். சேதுராமன், BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர். V. மகேஸ்வரன், மாநில பொறுப்பாளர் தோழர். N.P. ராஜேந்திரன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். கிளையின் புதிய நிர்வாகிகளாக தோழர். P. தங்கமணி தலைவராகவும், தோழர். R. பிரபாகரன் கிளைச் செயலராகவும், தோழர். P. சிவசாமி கிளைப் பொருளாளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments