எழுச்சியுடன் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட விரிவடைந்த செயற்குழு !
October 01, 2021
எழுச்சியுடன் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட விரிவடைந்த செயற்குழு !
இன்று 01.10.2021 காரைக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பில் விரிவடைந்த செயற்குழு மற்றும் உலக முதியோர் தின சிறப்புக் கூட்டம் காரைக்குடி தொலைபேசி நிலைய வளாகத்தில் உள்ள BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் காலை 1045 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர். ராதாகிருஷ்ணன் மற்றும் கொரோனா தொற்றால் நாம் இழந்த தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தோழர். அ. ஆ. இராமன் துவக்க உரையாற்றினார். மாவட்ட சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்திட ஆலோசனைகள், கருத்துக்கள் கேட்கப்பட்டது. மாநில உதவி செயலாளர் தோழர். மாடக்குளம் செல்வராசன் மத்திய மாநில சங்கங்களின் சாதனைகள், நடைபெற்ற இயக்கங்கள் பற்றிய விபரங்களையும், முதியோர் சந்திக்கும் பிரச்சனைகளையும் தனது சிறப்புரையில் விரிவாக எடுத்து கூறினார்.
மாவட்ட செயற்குழுவில் கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1) கீழ்கண்ட தோழர்களை உள்ளடக்கிய மாவட்ட மையம் அமைக்கப்பட்டது. அதில் மாவட்ட தலைவர் தோழர். முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் தோழர். அ. ஆ. இராமன், மாவட்ட பொருளாளர் தோழர். R. சுப்பரமணி மற்றும் தோழர்கள் பூமிநாதன், தேவகோட்டை ராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் மைய தோழர்களாக இருந்து செயல்படுவார்கள்.
2) தேவகோட்டை பகுதியில் உள்ள தோழர்களை ஒருங்கிணைத்து புதிய கிளை சங்கத்தை துவக்குவது.
3) மத்திய மாநில சங்கங்களின் அனைத்து இயக்க அறைகூவலையும் எதிர்காலத்தில் காரைக்குடி மாவட்டத்தில் உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்திட முயற்சிப்பது.
4) மாவட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்திட குடும்ப ஓய்வூதியர்கள் மற்றும் அனைத்து ஓய்வூதியர்களையும் நேரில் சென்று சந்தித்து நமது சங்கத்தில் உறுப்பினராக்குவது.
நிறைவாக தேவக்கோட்டை தோழர். ராசேந்திரன் அவர்கள் நன்றி கூற செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றது. சிறப்பாக செயற்குழுவை நடத்திட்ட மாவட்ட நிர்வாகிகளை மாநிலச்சங்கம் பாராட்டுகிறது.
0 Comments