Latest

10/recent/ticker-posts

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை பொதுக்குழுக் கூட்டம்

உற்சாகமாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை பொதுக்குழுக் கூட்டம் !!

   





             தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை பொதுக்குழுக் கூட்டம் இன்று 29.09.2021 காலை 11மணிக்கு கோவில்பட்டி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர். C. மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. சுப்பையா அஞ்சலிஉரை ஆற்றினார். கிளைச் செயலர் தோழர். P. முத்துராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். மூத்த தோழர் K. கோலப்பன் முன்னிலை வகித்தார்.

                     மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் கிளை பொதுக்குழுவை துவக்கி வைத்து பேசினார். அவர் தனது உரையில் 21-09-2021ல் தூத்துக்குடியில் நடைபெற்ற செயற்குழு முடிவுகள், புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டமையம் மற்றும் BSNLEU, AIBDPA, TNTCWU இணைப்புக்குழு, 01-10-21 உலக மூத்தோர் தினம், 05-10-21, 22-10-21 இணைப்புக்குழு போராட்டங்கள், 21-10-21 AIBDPA அமைப்பு தினம், 26-10-21 மாவட்ட மாநாடு இவற்றை சிறப்பாக நடத்திட தேவையான நிதி மற்றும் அணி திரட்டுதலை செய்ய வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மத்திய மாநில மாவட்டச் சங்கங்களின் போராட்ட அறைகூவல்களையும் அவற்றை நமது மாவட்டத்தில் செயல்படுத்திய சாதனைகளையும் விவரித்தார்.

           அகில இந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் 01-10-21 உலக மூத்தோர் தினம் பற்றிய விபரங்களையும், மத்திய அரசின் தொடர்ச்சியான மக்கள் விரஷத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைபாடுகளையும், தேசிய பணமயமாக்கல் திட்டத்தால் ஏற்படும் ஆபத்தையும், வேளாண் சட்டம், மின்சாரச் சட்டம், திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தொகுப்பு அதனை எதிர்த்து நடைபெற்ற பாரத் பந்த்தில் நமது சங்க ஆதரவு நிலைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

.   மாவட்டச் சங்க செயல்பாட்டு அறிக்கையை கிளைச் செயலர் தோழர். P. முத்துராமலிங்கம் வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட 9 தீர்மானங்கள் வாசித்து ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாவட்டப் பொருளாளர் தோழர். K.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். 28க்கும் மேற்பட்ட பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கிளை நிர்வாகி தோழர். பரமசிவம் நன்றிஉரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments