Latest

10/recent/ticker-posts

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் புதிய கிளை துவக்கமும் & மாவட்ட செயற்குழுக் கூட்டமும்

உற்சாகமாக நடைபெற்ற – நெல்லை மாவட்டம் அம்பையில் புதிய கிளை துவக்கமும்  & மாவட்ட செயற்குழுக் கூட்டமும்

   





        02/10/2021 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் எண் 5, லீலாசுவாமி இல்லத்தின் “மறைந்த மாவட்ட செயலாளர் தோழர் D. கோபாலன் நினைவரங்கில்” வைத்து நமது AIBDPA சங்கத்தின் அம்பாசமுத்திரம் கிளை துவக்க மாநாடு உற்சாகமாக நடைபெற்றது.

        மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தோழர். S.G.சுப்ரமணியன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர். M. கனகமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.

              அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் கிளையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

             நெல்லை மாவட்ட உதவித் தலைவர் தோழர் S. தாமஸ், தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர், சென்னை மாவட்டத் தலைவர் C. சுவாமிகுருநாதன், நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர். V. சீதாலெட்சுமி, தென்காசி கிளை தலைவர் தோழர். R. இராமநாதன், கிளைச் செயலர் தோழர் . K.கணேசன், வள்ளியூர் கிளைச் செயலர் தோழர். A. பிச்சுமணி மற்றும் மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர். கிறிஸ்டோபர் ராஜதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

                 புதிய கிளையின் தலைவராக தோழர். P. முருகன், கிளைச் செயலராக தோழர். S. P. கணேசன், கிளைப் பொருளாளராக தோழர். V. கல்யாணி உள்ளிட்ட 11 தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். கிளை துவக்க விழா நிறைவாக தோழர். N.கணபதி நன்றி கூறினார்.

நெல்லை மாவட்ட செயற்குழுக் கூட்டம் :-


 






          மதியம் 2 மணிக்கு நமது மாவட்ட செயற்குழு கூட்டம் துவங்கியது.

    மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துசாமி அவர்கள் தலைமை தாங்கி, நிகழ்ச்சி நிரலை வாசித்து ஒப்புதல் வாங்கினார்.
                  அதன்பின் நமது மூத்த தோழரும் மாவட்ட உதவி தலைவருமான தோழர் S. தாமஸ் அமைப்பு நிலை விவாதத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அனைத்திந்தியத் துணைத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் அவர்களின் சிறப்புரையில் பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.

                  அதன்பின் மாவட்ட செயலாளர் தோழர். M. கனகமணி மூன்று மாத காலத்திற்கான செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்துப் பேசினார். மாவட்டச் சங்கநிர்வாகிகளும் கிளைச் செயலர்களும் மற்றும் தோழர்களும் செயல்பாட்டு அறிக்கையை பாராட்டியும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட விசயங்களைப் பற்றியும் விரிவாக பேசினார்.
                 அதன்பின், மாவட்டச் செயலர் மாவட்ட மாநாடு நடத்துவது பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்டச் சங்க மாநாட்டை 27/10/2021 அன்று நெல்லையில் உள்ள தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) கட்டிடத்தின் Meeting Hallலில் வைத்து ஒருநாள் மாநாடாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாநாட்டு நன்கொடையாக தலா Rs..500/- வீதம் உறுப்பினர்களிடமிருந்து பெறுவது எனவும், அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ், மாநில தலைவர், மாநில செயலர், மாநில பொருளாளர் தவிர மற்ற சிறப்பு பேச்சாளர்களாக தூத்துக்குடி, விருதுநகர், நாகர்கோவில் மாவட்டச் செயலாளர்களை அழைப்பது எனவும், BSNLEU மற்றும் TNTCWU மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகத் தரப்பில் இருந்து அதிகாரி ஒருவரையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

     நிறைவாக தோழர். S. சங்கரநாராயணன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது. சிறப்பான ஏற்பாடுகளை செய்து புதிய அம்பை கிளையை துவக்கி வைத்து மாவட்டச் செயற்குழுவையும் நடத்திட்ட மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் அம்பை கிளை புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் பாராட்டி வாழ்த்துகிறது.

Post a Comment

0 Comments