AIBDPA மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக மதுரை தெற்கு கிளை துவக்க மாநாடு 13-10-2021 அன்று மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலைய வளாகத்தில் உள்ள BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் ஜான்போர்ஜியா தலைமையுரை ஆற்றினார். தோழர் உத்தரகுமார் மாவட்டசெயலர் வரவேற்புரை ஆற்றினார்.
புதிய கிளையை துவக்கி வைத்து தோழர் S.மோகன்தாஸ் அகில இந்திய துணைத் தலைவர் சிறப்புரை ஆற்றினார். தோழர். M. செல்வராஜன் மாநிலத் துணைச் செயலர், தோழர் .C.செல்வின் சத்தியராஜ், BSNLEU மாவட்டச் செயலர், தோழர். சோணைமுத்து, TNTCWU மாவட்டச் செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கிளை சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக 1. கிளைத்தலைவர் தோழர். A.தமிழ் 2. துணைத் தலைவர் தோழர். S. உதயசூரியன் 3. கிளைச்செயலர் தோழர். S. செல்வம் 4. துணைச் செயலர் தோழர். K. R. ஏகனாத் 5. கிளைப்பொருளாளர் தோழர். M. ராஜேந்திரன் 6. அமைப்புச் செயலர்கள் தோழர்கள். P. சரஸ்வதி, மணிவண்ணன், முகமதுஜமாலுதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை தெற்கு கிளை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கிளைச் சங்க நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்.
0 Comments