சிறப்பாகக் கொண்டாடுவோம் ! - AIBDPAவின்13 வது அமைப்பு தினத்தை !!
October 12, 2021
சிறப்பாகக் கொண்டாடுவோம் ! –
AIBDPAவின்13 வது அமைப்பு தினத்தை !!
அன்புள்ள தோழர்களே,
நம் வலிமை மிக்க, போராட்ட குணம் வாய்ந்த AIBDPA அகில இந்திய சங்கத்தின் 13 வது அமைப்பு தினம் வரும் 21.10.2021 அன்று வருகிறது.
டெல்லியில் உள்ள கார்வால் பவன் என்ற இடத்தில் நடந்த ஒரு செமினாரின் இறுதியில், இதே அக். 21, 2009ல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகளால் AIBDPA உருவாக்கப்பட்டது. அப்போதைய, அங்கீகாரம் பெற்ற ஒரே சங்கமாய் இருந்த BSNLEU சங்கத்தின் தலைவர்களால், ஓய்வு பெற்றவர்களுக்கு தனியாக ஒரு சங்கம் அமைப்பது என்ற மைசூர் மத்தியச் செயற்குழு முடிவுக்கு ஏற்ப, அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்றவர்களுக்கான 50% DA இணைப்பு, 2007க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கான பென்சன் ரிவிஷன், போன்ற தீராத பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இதற்கான போராட்டங்கள் 19.08.2009, 20.08.2009 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் வந்து நின்றது. மேலும், பாராளுமன்றத்தில் PFRDA என்ற பென்சன் நிதிக் கட்டுப்பாட்டு சட்டம் என்ற கடுமையான சட்டம் அமலுக்கு வர இருந்தது.
டெல்லியின் கருத்தரங்கம் பல மேன்மைமிகு தோழர்களை பங்கு பெற வைத்தது. தோழர். M. K. பாந்தே சிஐடியு தலைவர், தோழர். S. K வியாஸ் NCCPA செயலர், BSNLEU பொதுச்செயலர் VAN நம்பூதிரி, கல்கத்தாவிலிருந்து அனந்தகுமார் பட்டாசார்ச்ஜி, கேரளாவிலிருந்து தோழர். P. V. சந்திரசேகரன் பங்கேற்றனர். துவக்க உரை தோழர் பாந்தே ஆற்றியது அற்புதமான ஒன்று. ஓய்வு பெற்றவர்கள் என்பவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு அங்கமே என்றும், அவர்களை அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது என்றும் உறுதியான முறையில் தெரிவித்தார். பணியில் இருப்பவர்களுடன் சேர்ந்து அவர்களால் எந்த இயக்கத்தையும் வெற்றிகரமாக கட்டமைக்க முடியும் என்றும் ஆணித்தரமாகக் கூறினார். இவைதான், அன்றைய செமினாரின் அடித்தளமாக அமைந்தன. தோழர். VAN நம்பூதிரி, சங்கத்திற்கான அமைப்புச் சட்ட முன் வரைவை, தோழர். சந்திரசேகரன் தலைமையில் உள்ள 25 பேர் கொண்ட கமிட்டியால் உருவாக்கப்பட்டதை, சில திருத்தங்களுடன் முன்வைத்துப் பேசினார்.
25 தீர்மானங்களை கொண்ட கோரிக்கை மனு அங்கீகரிக்கப்பட்டது. அதில் பென்சன் ஃபண்ட் சட்டம் வாபஸ், தேசிய பென்சன் திட்டம் (NPS) முடக்கம், 2007 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கான பென்சன் ரிவிஷன் போன்றவை இருந்தன. BSNL அமைக்கப்பட்ட தினத்தில் இருந்து 10 மாதங்களில் ஓய்வு பெற்றவர்களின் சம்பள அனாமலி நீக்கப்படுதல், சம்பளத்தில் வேற்றுமையின்மை, DOT பென்சனர்களுக்கு மருத்துவப்படி Rs. 1000 மாக அதிகரிப்பு, பங்கு விற்பனை கூடாது என்று கோரிக்கைகள் வகுக்கப்பட்டன.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற எந்தவிதமான இயக்கங்களையும் நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1. பிரச்சினைகள் தீர, பல்வேறு பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது, 2. BSNL ஊழியர் சங்கங்களுடன் ஒருங்கிணைந்த இயக்கம், போராட்டங்களில் பங்கேற்பு. 3. மத்திய தொழிற்சங்கங்களுடன் ஒற்றுமை மற்றும் இயக்கங்களில் பங்கேற்பு.
கருத்தரங்கின் முடிவில், தோழர் நம்பூதிரி (ஆலோசகர்), தோழர். சந்திரசேகரன் (புரவலர்), தோழர். A. K. பட்டாசார்ச்ஜி (தலைவர்), தோழர். K. G. ஜெயராஜ் (பொதுச் செயலர்) என்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 14.12.2009ல் கூடி, மத்திய அமைச்சர் ராஜாவுடன் 17.11.2009ல் நடத்திய சந்திப்பின் விளைவுகளை ஆராய்ந்தனர். பென்சன் ரிவிஷன் மட்டும் சாத்தியம் என்று அமைச்சர் சொன்னாலும், மற்ற கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை என்பதை கணக்கில் கொண்டு, 29.01.2010 அன்று மாவட்ட மட்டங்களில் (SSA level) ஒரு நாள் தர்ணா நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த சமயத்தில், ஒரு மாநில அளவிலான கிளை கூட நம்மால் நிர்மாணிக்கப்படாத நிலையிலும், உறுப்பினர்கள் மீது நாம் வைத்த நம்பிக்கை, நம்மை அப்படி முடிவெடுக்க வைத்தது. அது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சங்க உறுப்பினர்களால் உறுதிப்படுத்தப்பட்டது என்பது மட்டுமல்ல, பின்னர் 12 வருடங்களில் நாம் மேற்கொண்ட பாராளுமன்ற, சஞ்சார் பவன் பேரணி போன்ற மாபெரும் இயக்கங்களுக்கு தூண்டுகோலாயும் அமைந்தது.
NCCPA, BCPC போன்ற ஓய்வு பெற்றவர்களுக்கான கூட்டமைப்புகளால் AIBDPA அங்கீகரிக்கப்பட்டது. பார்சிலோனா நகரில் 2014ல், TUI (P&R) மூலம் நடைபெற்ற உலக அளவிலான ஓய்வூதியர் மாநாட்டில் நமது AIBDPA சங்கம் சார்பாக கலந்து கொண்ட தோழர். VAN நம்பூதிரி டெக்னிகல் கமிட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ல் கொலம்பியாவின் பகோட்டாவில் நடந்த மாநாட்டில், நம் பொதுச்செயலர் K. G. ஜெயராஜ் எக்சிகியூட்டிவ் போர்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் நம் சாதனைகள் என பின் வருவனவற்றைச் சொல்லலாம்.
2007க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு IDA முறையில் பென்சன் ரிவிஷன், 78.2% DA, 60:40 என்ற BSNLலிருந்து ஓய்வூதியர்கள் ஃபண்டிற்கான நிதிக்கட்டுப்பாடு நீக்கம், BSNL குடியிருப்புகளில் ஓய்வு பெற்றவர் அனுமதி, அகண்ட அலைவரிசை (broadband)யில் 60%, FTTHல் 40% சலுகை, ரூபாய்.1000 மெடிக்கல் அலவன்ஸ், மேலும் DOT பென்சனர்களுக்கும் ஆப்ஷன் 3 சலுகை, போன்றவை முக்கியமான தீர்க்கப்பட்ட பிரச்சினைகள். பின்னர் DOT அனாமலி விஷயத்திலும் சரி செய்வதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, சுப்ரீம் கோர்ட் உதவியால் BSNL ஊழியர் சங்கமும், AIBDPAவும் இவற்றில் பல இயக்கங்களை ஒன்றிணைந்து நடத்தியது. 2011ல் மினிமம் பென்சன் 50% என்ற ஆணை DOT – யால் பிறப்பிக்கப்பட்டது. ஒரு சிலர் இதனால் பயனடைந்தாலும், தன்னிச்சையான இந்த ஆணைக்கு எதிராக களமாடினோம். 5வது சம்பள கமிசன் அடிப்படையில், அனாமலி களையப்பட வேண்டும் என்று கோரினோம். சில ஓய்வூதியர் சங்கங்கள் நீதிமன்றம் சென்றதால், இந்தப் பிரச்சினை பற்றி பேசவே DOT மறுத்து விட்டது. இவ்வாறு தான் பெரிய காலதாமதம் உருவானது.
BSNL மற்றும் DOT பென்சர்களுக்கான மாபெரும் சங்கமாக உருவெடுத்தோம். இதன் காரணம் நாடு முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற நம் உறுப்பினர்களையே சாரும். அவர்கள் AIBDPA வின் மீது வைத்த நம்பிக்கையும், சங்கம் நடத்தும் இயக்கங்களில் தவறாமல் பங்கு பெறுதலே ஆகும். நம் சங்கம் தவிர, மற்ற கூட்டமைப்புகளின் இயக்கங்களிலும் உறுப்பினர்கள் தீரமுடன் பங்கேற்கின்றனர். இந்த சமயத்தில் BSNL ஊழியர் சங்கம், NCCPA மற்றும் CONFEDERATION முதலிய அமைப்புகளுக்கும் நம் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
மத்திய தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில், நம் சங்கச் சட்டவிதிப்படி பங்கு கொள்கிறோம். ஆதரிக்கிறோம். தலைநகரில் நடந்து கொண்டிருக்கும், மோடி அரசால் கொண்டு வந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து அவர்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரித்தும், 5 லட்சம் நன்கொடை வழங்கியும் நம் ஆதரவைத் தெரிவித்து வருகிறோம்.
நமது வேண்டுகோளின் படி, நம் உறுப்பினர்கள் அந்தந்த மாநிலச் சங்கங்களின் மூலமாக PM Care , CM relief முதலியவற்றிற்கு நன்கொடைகள் கொடுத்திருக்கிறோம்.
ஒரு சங்கத்திற்கு ஜனநாயகச் செயல்பாடு அவசியம். அதன்படி, நம் சங்கம் 3 அகில இந்திய மாநாடுகளை 2013, 2016, 2019 ஆண்டுகளில் கண்ணூர், திருப்பதி, கல்கத்தாவில் நடந்தன. மத்திய செயற்குழு அவ்வப்போது கூடி, தேவையான முடிவுகளை எடுத்து வருகிறது.
இன்னும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம். தீர்க்கவேண்டிய பிரச்சினைகளும் முக்கியமானவை. அதிகார ஆணவம் மிக்க BSNL நிர்வாகம் நம் மருத்துவ சலுகைகளை வழங்குவதில் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. 2017 லிருந்து வரவேண்டிய 15% பென்சன் ரிவிஷன், ஊதிய உயர்வில் இருந்து delink செய்தல் காலதாமதம் ஆகிக்கொண்டே வருகிறது. DA/DR தவணைகளும் காரணமின்றி தாமதமாகின்றன. AIBDPA தேசிய அளவில் பல போராட்டங்களை, நம் கௌஹாத்தி மத்திய செயற்குழு முடிவின்படி, நடத்தி வருகின்றது. 110 பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மெமொரண்டம் கொடுத்திருக்கிறோம். இவர்களில் அமைச்சர்கள், சபாநாயகர் முதலியவர்களும் அடக்கம். முடிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பேரணி, 12.03.2020, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பென்சன் சட்டங்களில் மாறுதல் செய்து 70-75 வயதை தாண்டிய ஓய்வூதியர்களுக்கு Fixed Pension கொடுக்க முயற்சிகள் நடக்கின்றன. VRS 2019ல் தரப்பட்ட எல்லாவித உத்தரவாதங்களும் அரசு மற்றும் BSNL நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை. VRS 2019ல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கவேண்டிய புரொவிசனல் பென்சன் கூட, நம் சங்கம் எடுத்த முயற்சியால் கிடைத்தது. அரசும், நிர்வாகமும் ஒன்றுக்குள் ஒன்றாக, தனியாருக்கு ஆதரவான நிலை எடுத்து, பொதுத்துறைகளை அழிக்க வேண்டும் என்ற மோடி ஆட்சி ஆதரவு நிலை எடுக்கின்றன. இவை முக்கியமாக நம்முன் உள்ள பிரச்சனைகள்.
நமதுAIBDPA ஒன்று தான் பஞ்சப்படி முடக்கத்திற்கு எதிரான நிலையெடுத்து, மூன்று DA/DR முடக்கம் பொதுத்துறைகளுக்குச் செல்லாது என்று DPEயிடம் கடிதம் கொடுத்தது. அமைச்சரும், DPEயும் ஒத்துக் கொண்டாலும், நிவர்த்தி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே தான் நீதிமன்றத்தை நாடி, சாதகமான தீர்ப்பை கேரளா உயர்நீதி மன்றத்தில் பெற்றோம். ஆனால், DOT அதை மதிக்கவுமில்லை, ஏற்றுக் கொள்ளவுமில்லை.
இந்தப் பின்னணியில் தான் நாம் 13 வது அமைப்பு தினத்தை வரும் 21.10.2021 அன்று கொண்டாட இருக்கிறோம். மத்திய சங்கம் தேசிய அளவில் இணைய கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மாலை 4மணி முதல் 6 மணி வரை இருக்கலாம். விவரங்கள் பின்னர் பகிரப்படும். அதில் பங்குபெற எவ்வளவு பேர் என்ற எந்த வித உச்சவரம்பும் இல்லை என்பதால், உறுப்பினர்கள் திரளாக அதில் கலந்து கொள்ளவும்.
மாநில, மாவட்ட அளவில் கொடியேற்றி, அமைப்பு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். கருத்தரங்கு, முதிய சீனியர் தோழர்களை கவுரவித்தல், இனிப்பு வழங்குதல், தேவையான உணவு முதலிய நன்கொடை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வீர். மறக்காமல் புகைப்படங்களை அனுப்பவும்.
ஒற்றுமை நமது லட்சியம் !
போராட்டம் நமது பாதை!!
AIBDPA Zindabad !!!
வாழ்த்துகளுடன், K. G. ஜெயராஜ். பொதுச்செயலர்.
தோழர்களுக்கு மாநில சங்கங்கத்தின் கனிவான வேண்டுகோள் :- அகில இந்திய சங்கங்கத்தின் சுற்றறிக்கையை எல்லா உறுப்பினர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கும்படி மாவட்டச் செயலர்களை கேட்டுக் கொள்கிறோம். 21-10-2021AIBDPA தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாட, வேண்டுகிறோம். இவண் என்.குப்புசாமி மாநில செயலர்
0 Comments