Latest

10/recent/ticker-posts

உற்சாகமாக துவங்கிய நெல்லை சங்கரன்கோவிலில் புதிய கிளை மாநாடு !

உற்சாகமாக துவங்கிய நெல்லை சங்கரன்கோவிலில் புதிய கிளையின் மாநாடு !





     நெல்லை மாவட்டம் AIBDPA சங்கத்தின் சங்கரன்கோவில் கிளை துவக்க மாநாடு, இன்று 10/10/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சங்கரன்கோவிலில் உள்ள ஐம்பதூர் தேவாங்கர் சத்திரம் கல்யாண மண்டபம், மறைந்த தோழர். முகமது எகியா நினைவு அரங்கத்தில், வைத்து உற்சாகமாக நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துசாமி தலைமை தாங்கினார். தோழர். S.K.மாரியப்பன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர். M. கனகமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.



          அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் கிளையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

               





               தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர், சென்னை மாவட்டத் தலைவர் C. சுவாமி குருநாதன், நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர். V. சீதாலெட்சுமி, தென்காசி கிளைச் செயலர் தோழர். K.கணேசன், வள்ளியூர் கிளைச் செயலர் தோழர் A. பிச்சுமணி, அம்பாசமுத்திரம் கிளைச் செயலர் தோழர். S. P. கணேசன் மற்றும் மற்றும் சங்கரன்கோவில் பகுதி BSNLEU தோழர். கோமதிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

        புதிய கிளை தலைவராக தோழர். S. K. மாரியப்பன், கிளைச் செயலராக தோழர். D. கிறிஸ்டோபர் ராஜதுரை, கிளைப் பொருளாளராக தோழர். V. ராமநாதன் உள்ளிட்ட 10 தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.



        கிளை துவக்க விழாவின் நிறைவாக புதிய கிளைச் செயலர் தோழர். D. கிறிஸ்டோபர் ராஜதுரை நன்றி கூறினார்.

    குறுகிய கால இடைவெளியில் விரைவாக கிளைகளை சிறப்பாக துவக்கிய நெல்லை மாவட்டச் சங்க நிர்வாகிகளையும், இன்று துவங்கப்பட்ட சங்கரன்கோவில் புதிய கிளைச் சங்க நிர்வாகிகளையும் மாநில சங்கங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் !

இவண் என்,கே,மா.செ

Post a Comment

0 Comments