மதுரை திண்டுக்கல்லில் AIBDPA சங்க கிளை பொதுக்குழுக்கூட்டம்
October 31, 2021
மதுரை திண்டுக்கல்லில் AIBDPA சங்க கிளை பொதுக்குழுக்கூட்டம்
30.10.2021 அன்று திண்டுக்கல்லில் AIBDPA சங்கத்தின் கிளை பொதுக்குழுக் கூட்டம் கிளை தலைவர் தோழர். A. பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயளர் தோழர். J. ஜோதி நாதன் அஜெண்டா முன்மொழிந்து பேசினார். தோழர். S. ஜோசப்ராஜ் கிளையின் பொருளாளர் சென்னையில் 22.10.2021ல் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் பற்றி விளக்கிபேசினார். தோழர். S. ஜான் போர்ஜியா மாவட்ட தலைவர் மதுரை மாவட்ட மாநாடு பற்றியும், இன்றைய BSNL ஓய்வூதியம், தேசிய நிலமை குறித்தும் பேசினார். 💜 28.11.2021ல் நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டிற்கு நன்கொடையாக ரூபாய் 500 வசூலிப்பது. 💜AIBDPA சங்கத்தின் உறுப்பினர்களை அதிகரிப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
கிளை பொதுக்குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த கிளைச் சங்க நிர்வாகிகளையும் கலந்து கொண்ட தோழர்களையும் மாநிலச்சங்கம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.
0 Comments