காரைக்குடி மாவட்டச் சங்க பொதுக்குழு கூட்டம்
19.9.2021 அன்று காரைக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் on line மூலமாக மாவட்ட தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் காலை 10.00மணிக்கு துவங்கி மதியம் 1250 வரை நடைபெற்றது. மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர். தேவகோட்டை ராசேந்திரன் முன் மொழிய, தோழர். கோவிந்தராஜன் வழிமொழிய மாவட்டச் சங்கத்தின் செயலாளராக தோழர். A. A. ராமன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தோழர்கள் V.சுப்பிரமணி, பூமிநாதன் கோவிந்தராஜ், ராசேந்திரன், குழந்தைசாமி, கனகராஜ், ராமநாதபுரம் லோகநாதன், ஆகியோர் தங்களது ஆலோசனை மற்றும் மாவட்ட சங்கத்தின் வளர்ச்சிக்கு உரிய கருத்துக்களை கூறினார்கள்.
மாநில தலைவர் தோழர். C.K. நரசிம்மன், மாநில பொருளாளர் தோழர். S. நடராஜா, மாநில உதவி செயலாளர் தோழர். மாடக்குளம் M. செல்வராசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர். P. ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில செயலாளர் தோழர். N. குப்புசாமி நிறைவாக ஓய்வூதியர்களின் பிரச்சினைகள், மாநில சங்கத்தின் சார்பில் கடந்த காலத்தில் தீர்வு கண்ட பொது மற்றும் தனிநபர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் எதிர்காலத்தில் காரைக்குடி மாவட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்திட அனைத்து தோழர்களும் இனைந்து பணியாற்ற வேண்டும் எனக்கூறி, புதிய மாவட்ட செயலாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் காரைக்குடி மாவட்ட சங்கத்தின் தோழர்களுக்கு மாநில சங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும் என கூறினார்.
இறுதியாக நன்றி தெரிவித்தும், ஏற்புறையாக மாவட்ட செயலாளர் தோழர். A. A. ராமன் காரைக்குடி மாவட்டத்தில் அனைத்து தோழர்கள் உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பாடுபடுவோம் என கூறி பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
0 Comments