Latest

10/recent/ticker-posts

அக்டோபர் 1 சர்வதேச போராட்ட நாளை வெற்றிகரமாக நடத்த TUI(P&R) செயற்குழு அறைகூவல் !!!

  AIBDPA TN

 TUI(P&R) செயற்குழுக் கூட்டம்:

அக்டோபர் 1 சர்வதேச போராட்ட நாளை வெற்றிகரமாக நடத்த அறைகூவல்.

        உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் (WFTU) ஓய்வூதியர் மற்றும் முதியோர் அமைப்பான TUI(P&R)-இன் செயற்குழுக் கூட்டம் 30.06.2026 அன்று இணையவழியில் நடைபெற்றது. 

தலைவர் தோழர் டெமோஸ் கௌம்போரிஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச் செயலாளர் தோழர் குயிம் போய்க்ஸ் ஜெனீவாவில் நடைபெற்ற 114வது ILO மாநாடு உள்ளிட்ட முக்கிய சர்வதேச நிகழ்வுகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். 

          வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், கியூபா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து விதித்து வரும் மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

              அக்டோபர் 1 சர்வதேச போராட்ட நாளுக்கான ஆவணம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர் எதிர்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக அமைப்பை வலுப்படுத்தி போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. 

       இந்தியாவின் சார்பில் தோழர்கள் கே.ஜி. ஜெயராஜ் மற்றும் டி.கே. தேப்நாத் பங்கேற்று, தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நடத்தி வரும் கூட்டு போராட்டங்களையும், 2026 டிசம்பர் 11 அன்று டாக்காவில் நடைபெறவுள்ள 3வது ஆசிய பிராந்திய மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும் விளக்கினர். 

அனைத்து பிராந்திய மாநாடுகளையும் திட்டமிட்டபடி நடத்தவும், அடுத்த செயற்குழுக் கூட்டத்தை 2026 செப்டம்பர் 1 அன்று நடத்தவும் செயற்குழு முடிவு செய்தது.

தோழமையுள்ள 
R.ராஜசேகர்
CS AIBDPA TN.
2.7.26

Post a Comment

0 Comments