Latest

10/recent/ticker-posts

22.9.22 தமிழ் மாநிலச் செயற்குழு - CHQ AGS தோழர். முரளிதரன் நாயர் - துவக்க உரை

22.9.22 தமிழ் மாநிலச் செயற்குழுவில் – CHQ AGS தோழர். முரளிதரன் நாயர் – துவக்க உரை

  






22.9.22 மாநிலச் செயற்குழுவில் நம் மத்திய சங்க உதவிப் பொதுச்செயலர் தோழர். முரளிதரன் நாயர் அவர்களின் உரை.
(முக்கிய கருத்துகள் )

👉24.08.22 டெல்லி பேரணியின் முக்கியத்துவம் ஒரே வாரத்தில் தெரிந்தது.
👉 மெடிக்கல் அலவன்ஸ், பில்கள் சம்பந்தமாக ஆர்டர்கள் வெளியாகின. இது நம் சங்கம் முன்னெடுத்த போராட்ட இயக்கங்களின், கொடுத்த அழுத்தங்களின் காரணமாகவே ஆனது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

பலரால் இதைத் தாங்க முடியவில்லை என்பதும் உண்மை.

👉இந்த 15 ஆண்டுகள் பென்சன் ரிவிஷன் தாமதத்திற்கு மத்திய அரசுதான் காரணம்.

தனியார்களை ஊக்கப்படுத்தும், பெரிய நிறுவனங்களை மேலும் வலுவாக்கி, நஷ்டமடையும் நிறுவனங்களை அவர்களிடமே சேர்ப்பதுமான அரசின் கொள்கைகள்தான் காரணம்.

அரசு என்பது மக்களுக்காகவோ, பென்ஷனர்களுக்காகவோ என்பது அல்ல. அவர்கள் கார்ப்பரேட் முதலாளிக்காக உள்ளவர்கள்.

👉90 களில் ஆரம்பிக்கப் பட்ட தனியார்மயம் நோக்கி என்ற போக்கு, 2000 ல் வாஜ்பாய் தலைமையில், பங்கு விற்பனைக்கு என ஒரு அமைச்சரகத்தையே தோற்றுவிப்பதில் முடிந்தது. அருண்ஷோரி என்ற பத்திரிக்கையாளர், ரெட் கார்ப்பெட் விரித்து வைத்தார்.

👉2004 தேர்தலில் காங். அமைச்சரவை வந்ததாலும், இடதுசாரி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கணிசமாக இருந்ததால், தனியார் மயமாக்கும் போக்குகள் தள்ளிவைக்கப்பட்டன.

NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பங்கு விற்பனை நிறுத்தப்பட்டது.

ஆனால் அதே சமயம் ஊழல் என்ற வாசலின் கதவு அகலத் திறந்தது.

நமது துறையில் 2 G, நிலக்கரி ஊழல் என்று வெளியே தெரிய ஆரம்பித்த, காட்சிகள் காங். மீது கசப்பை ஏற்படுத்த, 2009 ல் இதைச் சரியாகப் பயன் படுத்திய BJP, ஆட்சியைப் பிடித்தது.

👉 2014 க்குப் பிறகு தனியார்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. Air India தனியார் வசம் சென்றது. தேசிய பணமீட்டல் திட்டப்படி, BSNL கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகிறது.

LIC, சுதந்திர இந்தியாவின் கனவில் உதித்தது, நிஜமாகி ஆலமரமாக இருப்பதில் இன்று பங்கு விற்பனை தொடங்கிவிட்டது.

அக்னி பாத், அக்னி வீர் என ராணுவம் தனியார் காண்ட்ராக்ட்களுக்கு வழி விட்டாகி விட்டது.

👉நிரந்தர ஊழியர் நியமனம் மறக்கப்பட்டு விட்டது. நிரந்தர ஊழியர் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சி. சமூக மேம்பாட்டின் அடித்தளம் அரசு உத்தியோகம். இன்று அனைத்தும் கானல் நீராகிப் போனது. தேவையான வேலை வாய்ப்புகள் ஏகப்பட்டது உள்ளன. நிரப்பும் எண்ணம் அரசுக்கு இல்லை.

👉இந்தியாவின் வளர்ச்சிக் குறியீடு, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5 ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால் சாதாரண காமன் மேனின் வாழ்வியல் கூறுகளில் முன்னேற்றமே இல்லை.

👉உலகின் பணக்காரர் லிஸ்டில், முதல் இடம் வகிக்கும் இலான் மஸ்க் – எனில் இரண்டாம் இடம் நம் இந்தியர் ஆதானி க்கு உள்ளது.

1980 ல் ஒரு சாதாரண சிறு கம்பெனி முதலாளி, எப்படி 40 ஆண்டுகளில், உலகின் இரண்டாம் செல்வந்தர் ஆனார்? யோசியுங்கள்.

👉அடுத்த பக்கம் பார்த்தோம் எனில், இந்திய விவசாய்கள், போராடினார்கள். விடாமல் போராட்டம். விவசாய விரோத சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டன. இன்று வேறு ரூபத்தில் வரும் என்கிறார்கள்.

👉2024 ல் என்ன நடக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.

👉நம் நிறுவனத்தை என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆராயவேண்டும்.

P&T என்று சேர்ந்திருந்ததை, நிறைய பிரித்தார்கள். VSNL, MTNL வந்தன. BSNL கார்ப்பரேட் ஆனால் நல்லது என்ற சிலர் எண்ணப்படி, பொதுத்துறை ஆனோம்.

👉2002. உறுப்பினர் சரிபார்ப்பு, நாம் எதிர் பார்த்தபடி இல்லை ; எனினும் மனந்தளறாமல், அடுத்தடுத்த தேர்தல்களில் வென்று வருகிறோம்.

👉BSNLEU வால் , மட்டும்தான் BSNL ஐக் காக்க முடியும்.

👉ஆரம்பத்தில் பிஎஸ் என் எல் பொதுத்துறை வாழ்வு நன்றாகவே இருந்தது. போனஸ், வாட்ச் என வித்தியாசப் பரிசுகள் கிடைத்தன.

👉2009 க்குப் பின், அவலங்கள் ஆரம்பித்தன. தனியார்களுக்கு சலுகை என்ற பெயரில் 4G வசதி கொடுக்கப் பட்டது. நமக்கு மறுக்கப்பட்டது.

👉2019 ல் புத்தாக்கம் ஒன்றின் மூலம், ஏராளமான மிகச் சிறந்த ஊழியர்களும் அதிகாரிகளும் வெளியே அனுப்பப்பட்டார்கள். (VRS 19).

👉கூடவே தருகிறேன் என்று வாக்களிக்கப்பட்ட 4G வசதி தரப்படவில்லை. சொன்னவை எதுவும் நடக்கவில்லை. 3 G என்ற தொழில் நுட்பத்தின் பெயரில், 4 G யைக் கொடுத்தது உகந்ததாயில்லை. தொழில் நுட்பம் வளராமல் வளர்ச்சி இல்லை. நிறுவனத்தின் நம்பிக்கை போய், மார்க்கெட் ஷேர் குறைந்தது.

👉முழு முதல் காரணம் இந்த ஆளும் அரசுதான் என்பதில் மிகையில்லை.

👉சமீபத்தில் இரண்டாவது புத்தாக்கம் என்று 1.64 லட்சம் கோடி நிதி உதவி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. 35 லட்சம் ஊழியர்கள் வெளியே மீண்டும் அனுப்பப்படுவார்கள் என்று திட்ட முன் வரைவு கூறியது.

👉உயரதிகாரிகள் சந்திப்பில், பிரதமர் கூறியபடி, perform or perish, செயல்படு அல்லது வெளியேறு என்ற கோஷத்தை நமது அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் எழுப்பினார்.

👉நம் ஊழியர் மத்தியில் இதற்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது. இது தொடர வேண்டுமெனில், BSNL ஊழியர் சங்கம் முழு முதற்சங்கமாக வருவதுதான் நலம் பயக்கும். BSNLEUவின் வெற்றிக்கு AIBDPA நாம் உழைத்திட வேண்டும்.

நம் சங்கம் BSNLEU வின் முன் முயற்சியில்தான் உருவானது. நம் ஓய்வூதியர்களுக்கான ஒரு அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற BSNLEU வின் செயற்குழு முடிவு அமல் ஆவதற்கு முன்னால், சென்னையில் ஒரு சில தோழர்கள் AIBSNLPWA என்ற சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

👉1.01.2007 ல் கிடைத்த பென்ஷன் ரிவிஷன் இரண்டாம் ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி வந்தது.

மூன்றாம் ஊதியக் குழு affordability என்ற விதியை நுழைத்தது தான் பிரச்சினையானது. ஆனால் சேவை நிறுவனங்களுக்கு, அரசு பரிந்துரைத்தால், கொடுக்கலாம் என்று ஊதியக்குழு தன் அறிக்கையில் கூறியது.

👉 நம் அப்போதைய CMD ம் பரிந்துரைத்தார். ஆனால் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

👉ஒரு பென்ஷனர் சங்கம், CDA ஸ்கேலுக்கு மாற்றி, மத்திய அரசு ஊழியர் போல பென்ஷன் நமக்கும் தரலாம் என்று பிரசாரம் செய்கிறது. ஆனால் நாம் வாங்கும் இப்போதைய IDA ஸ்கேல் எவ்வளவு மாற்றங்களுக்குப் பின் வந்தது என்பதை மறந்து விடுகிறார்கள். முதலில் பொதுத்துறை ஸ்கேலுக்கான மாற்றம், பிறகு இரண்டாம் ஊதியக்குழு மாற்றம், பிறகு 78.2 க்கான மாற்றம் என்று பல முறை திருத்தி அமைக்கப்பட்டது. கூடவே ஊழியர்களுக்கான NEPP, அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு போன்றவை விட்டுத்தர முடியாதவை. திரும்பவும் மாற்றவும் முடியாதவை.

👉ஆகையால்தான், கௌஹாத்தி மத்திய செயற்குழு முடிவின்படி, 15% உயர்வு கோரினோம். இயக்கங்கள் நடத்தினோம்.

👉நீதி மன்றம் செல்வது தாமதப்படுத்தும் என்றோம். மீறி சென்றவர்களே இன்று தாமதமாகும் என்று அறிந்துள்ளார்கள். கடிதம் கொடுக்கிறார்கள்.

👉மூன்று கட்ட போராட்டத்தின் இறுதி கட்டம் டெல்லியில் பேரணி. இது போல யாரும் திரண்டதில்லை என்ற அளவிற்கு பங்கேற்பு இருந்தது. ஆனால் அமலில் இருந்த 144 தடையுத்தரவு, நம்மை பேரணி நடத்த அனுமதிக்கவில்லை. நம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த காவல் துறை, உங்கள் அலுவலக வளாகத்தில் என்ன வேண்டுமானாலும் நடத்துங்கள், நாங்கள் உள்ளே வரவில்லை, நீங்களும் வெளியே போக வேண்டாம் என்று கதவை மூடி,  பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.

👉 வளாகத்தில் நம் போராட்டம் சிறப்பாக நடந்தது. அந்த நிகழ்ச்சி அரசின், BSNL நிர்வாகத்தின் செவிகளில் விழுந்தது நம் போராட்ட முரசின் ஓசை. அடுத்த வாரம் ஆணை வந்தது, மெடிக்கல் வசதிகளுக்கு. மேலும் ஊழியர்களுக்கு இணையாக இனிமேல் ஓய்வூதியர்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்பது நம் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி.

👉இதைத் தாங்க முடியாத மற்ற சங்கங்கள், பென்ஷன் ரிவிஷன் அப்ரூவ்டு, ஜீரோ சதவீத உயர்வு என்றெல்லாம் பொய்ப் பிரசாரம் ஆரம்பித்தார்கள்.

👉 ஒன்றும் நடக்கவில்லை என்றவுடன் கூட்டுச் செயல்பாடுகளுக்கு அழைத்தார்கள். பொதுவான அறிக்கை விட்டார்கள். நாம் அனைத்து சங்கங்களையும் அழைத்தபோது, தனித்தனியாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அவர்களின் முகவரியுடன் 2019ல் அழைப்பு அனுப்பினோம். அது போல இல்லாமல், வந்தால் வாருங்கள் என்பது போலத்தான் இருந்தது. நாம் கலந்து கொள்ளவில்லை. தற்போது கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

👉நீதி மன்றம் சென்றதை மறந்து விட்டு. IDA படி 2.51 என்று மாற்றம் வேண்டும் என்கிறார்கள்.

👉நம் அகில இந்திய மாநாடு டிச. மைசூரில் நடக்கிறது. ஏற்கெனவே சொல்லியபடி, மாநாடு நிதி, உறுப்பினர் ஒருவருக்கு 100 என்று வாங்கி, 50% மத்திய சங்கத்திற்கு அனுப்பவும். தேவையான பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அனுப்பவும். உறுப்பினர் பிரதிநிதிக் கட்டணம் 1500 /. இது தங்குமிடம் எல்லாம் சேர்ந்து. அனைவரும் வயதான சீனியர் சிட்டிசன் என்பதையும் கணக்கில் கொண்டு முடிவெடுத்தோம்.

👉மாநில நிர்வாகம் உறுப்பினர்கள் பட்டியலை உடனே கொடுக்கவும். அதற்கு ஏற்றபடிதான் நாங்கள் எவ்வளவு டெலிகேடஸ் என்பதை அறிந்து, ஏற்பாடுகள் செய்ய முடியும்.

👉இந்தியா முழுவதும் பரந்து விரிந்த அளவில் 1,20,000 பேர் உறுப்பினராக உள்ளனர். நாம் தான் முதன்மைச் சங்கம் என்பதில் பெருமை கொள்வோம்.

👉பென்ஷன் ரிவிஷன் பற்றி, வெளிப்படையாக இருங்கள் என்று, மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக பெறுவோம் பென்ஷன் மாற்றம்.

*தோழர். முரளீதரன் நாயர். AGS AIBDPA*

*திருத்தம்*

ஒரு பென்ஷனர் சங்கம் CDA scale-க்கு மாற்றி…

Last para மந்திரிக்கு

என்று மாற்றி படிக்கவும்

Post a Comment

0 Comments