Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி கிளை பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி கிளை பொதுக்கூட்டம்

 


                        இன்று 16 .07.2022 அன்று காலை சாய்பாபா காலனி கிளை பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிளைத் தலைவர் தோழர். பொன்னுசாமி அவர்கள் தலைமை பொறுப்பேற்றார். அவருக்கே உரிய பாணியிலேயே சிரிக்க வைத்து சிந்தனை தூண்டக்கூடிய அவரது தன்மையிலே தலைமை உரை நிகழ்த்தினார். அடுத்து கிளை பொருளாளர் தோழர். ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 



             பிறகு மாநில அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட உதவி செயலாளர் தோழர். பிரசன்னா நாம் சந்திக்க இருக்கக்கூடிய மத்திய சங்கத்தின் 6 அம்ச கோரிக்கைகளை விளக்கியும், போராட்டம் பற்றி விளக்கி பேசினார். தொடர்ந்து மாநில உதவி செயலாளர் மற்றும் மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர். வெங்கட்ராமன் 20.7.22 தர்ணா கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினார்.

                தொடர்ந்து கிளை உறுப்பினர்கள் தங்களது குறைகளை அல்லது கிளை வளர்ச்சி பற்றி ஏதும் தங்கள் கருத்துக்களை தோழர்கள் முன் வைக்கலாம் என்று கிளைத்தலைவர் கேட்டுக்கொண்டார். தோழியர் ஓமனா, தோழர் ராஜசேகரன் மற்றும் தோழர் பாட்டய்யன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் தோழர். குடியரசு பேசும் போது கோரிக்கைகள் பற்றியும், இன்றைய மாவட்ட சங்கத்தில் தேங்கி கிடக்கும் பிரச்சனைகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்ற விவரத்தையும், இதுவரை தீர்க்கபட்ட தீர்க்கபடாத பிரச்சனைகள் பற்றியும், விவாதத்தில் வந்த பிரச்சனைகளுக்கும் விளக்கம் கொடுத்தார். நிறைவாக அதிகப்படியான தோழர்கள் தர்ணாவில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

                கூட்டம் நிறைவு பெறுவதற்கு முன்பாக பல்வேறு காலகட்டத்தில் பணியில் இருக்கும் போது மற்றவர்களுக்கு உதவியாக இருந்த அதிகாரி தோழர். பிரம்மநாதன் DE RTD அவர்கள் கிளைச் சங்கத்தில் தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். தோழர் அவர்களை மாவட்டச் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. இறுதியாக தோழர் சுந்தர்ராஜன் உதவிச் செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Post a Comment

0 Comments