Latest

10/recent/ticker-posts

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் கிளையின் கிளைக் கூட்டம்

 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் கிளையின் கிளைக் கூட்டம்






வணக்கம் தோழர்களே...!!!

               நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் கிளையின் கிளைக் கூட்டம் 14-10-2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ஐம்பதூர் தேவாங்கர் சத்திரம் கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கிளைத் தலைவர் தோழர். S. K.மாரியப்பன் தலைமை தாங்கினார். தோழர். மலர்மன்னன் மாடசாமி அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலர் தோழர். D. கிறிஸ்டோபர் ராஜதுரை வரவேற்புரையாற்றினார்.

                  தோழர் S.முத்துசாமிலமாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார். தோழர் S.நடராஜா, மாநில உதவி தலைவர், மாவட்டச் செயலாளர் NCCPA மற்றும் FCPA கமிட்டி உறுப்பினர் சிறப்புரையாற்றினார்.

            தோழர் M.கனகமணி, மாவட்ட தலைவர் மற்றும் தோழர் S.சங்கரநாராயணன், மாவட்ட பொருளாளர் வாழ்த்துரை வழங்கினர். புதிய உறுப்பினர் தோழர் பழனிசாமி JAO (Rtd )  அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சில தோழர்கள் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

        தோழர்களின் கேள்விகளுக்கு மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார். 2025 டிசம்பர் 17 & 18 தேதிகளில் கோயாமுத்தூரில் நடக்கவிருக்கும் நமது அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது. உடனே வந்திருந்த தோழர்கள் நன்கொடை வழங்கினர். மொத்தம் நன்கொடை ரூபாய் 10,000/=(ரூபாய் பத்து ஆயிரம்) வசூல் செய்து சங்கரன்கோவில் கிளை சாதனை படைத்தது. நிறைவாக கிளை பொருளாளர் தோழர். ராமநாதன் நன்றி கூறினார்.


தோழமையுடன்,
D.கிறிஸ்டோபர் ராஜதுரை,
கிளைச் செயலர்,
சங்கரன்கோவில்  கிளை,
திருநெல்வேலி மாவட்டம்.
14-10-2025.

Post a Comment

0 Comments