AIBDPA TN சுற்றறிக்கை எண் 23 / 25 ...dt.28.5.25
1) 2.6.25 மகாராஷ்டிரா SC/ST ஓய்வூதியர்கள் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம்
2) 9.7.25 அகில இந்திய பொது நிறுத்தம்
3) மாநில செயற்குழு 19.6.25
4) 'ஓய்வூதியர் முழக்கம்' சந்தா சேகரிப்பு
தோழர்களே,
1) மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க மகாராஷ்டிரா மாநில SC/ST ஓய்வூதியர்களின் பிரச்சினைக்காக அனைத்து மட்டங்களிலும் 2 6 25 அன்று ஆர்ப்பாட்ட இயக்கம் நடைபெற அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.
BSNLEU மத்திய சங்கமும் இப்போராட்டத்தோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.
எனவே 2 6 25 அன்று அனைத்து மாவட்டங்களிலும் AIBDPA & BSNLEU இணைந்து ஆர்ப்பாட்ட இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
2) 20.5.25 அன்று நடைபெற இருந்த அகில இந்திய வேலைநிறுத்தம் 9.7.25 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்காக நடைபெறும் அனைத்து தயாரிப்பு இயக்கங்களிலும் தோழர்கள் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். 9.7.25 வேலைநிறுத்தம் அன்று நடைபெறும் மறியல், தார்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அத்தனை இயக்கங்களிலும் நாம் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் இன்றைக்கு கொண்டுவந்துள்ள ஓய்வூதிய மறு பரிசீலனை மசோதா 2025 ஓய்வூதிய மாற்றத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது.
இதனை புரிந்து கொண்டு இந்த வேலை நிறுத்தத்தை முழு வெற்றி அடைய செய்ய வேண்டியது ஓய்வூதியர்களின் தலையாய கடமை.
3) மாநில செயற்குழு கூட்டம். சென்னை -19 6 25
மாநில செயற்குழு கூட்டத்தை நடத்தும் பொறுப்பை சென்னை CGM அலுவலக மாவட்ட சங்கம் ஏற்றுள்ளது. தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை மாவட்ட சங்கம் நடத்தும் ஒரு மாநில நிகழ்வு இது.
மாவட்டச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள் பயணத்துக்கான ஏற்பாடுகளை முறையாக செய்து கொள்ள வேண்டும்.
நமது சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் K.G. ஜெயராஜ் அவர்கள் செயற்குழுவில் கலந்து கொள்கிறார்.
கூட்டம் சரியாக காலை ஒன்பது மணிக்கு துவங்கி மாலை ஆறு மணிக்கு முடியும்.
தோழர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு செயற்குழுவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
4) ஓய்வூதியர் முழக்கம்
தோழர்களே,
மாநில மாநாட்டு முடிவுக்கு இணங்க மாநில சங்கம் ஓய்வூதியர் முழக்கம் என்ற பெயரில் சங்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு இதழ்கள் வெளிவந்துவிட்டன. சந்தா சேகரிக்கும் பணியும் மாவட்டங்களில் முனைப்புடன் நடைபெற்று வருகிறது.
ஆனால் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் முதல் இதழே ஊழியர் மத்தியில் சென்றடைய வில்லை என்கின்ற தகவல் கவலைக்குரியதாக உள்ளது. சந்தா சேகரிக்கும் பணி பல மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3500 சந்தா என்கின்ற இலக்கை நாம் இன்றைக்கு வைத்திருக்கிறோம்.
7300 உறுப்பினர்களில் 3500 என்பது 50% தான். ஆனால் இதுவரை வந்திருக்கும் சந்தா தொகை 1300 மட்டுமே. உறுப்பினர் எண்ணிக்கை- இலக்கு- நாம் சேர்த்த சந்தா இவற்றிற்குள் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
தோழர்களே
ஜூன் 19 அன்று நடைபெறும் நம்முடைய மாநில செயற்குழு கூட்டத்தில் நம்முடைய இலக்கை பூர்த்தி செய்து விட வேண்டும்.
ஆகவே, மாவட்ட சங்கங்கள் உடனடியாக அந்த இலக்கை முடிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மே-ஜூன்'2025 இதழ் சந்தாதாரர்களுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
(சந்தாதாரர் விலாசங்களை மாவட்ட செயலர்கள் சேகரித்து
டைப் செய்து மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.)
மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள், கிளைச் செயலாளர்களுக்கும் தனியாக அனுப்பப்படும்.
சந்தா போக மீதமுள்ள இதழ்கள் மாவட்ட செயலாளர்களுக்கும்,
கிளைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுப்பப்படும்.
தொடர்ந்து சந்தா சேகரிப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும்.
3500 என்கின்ற இலக்கை அடைந்தால் தான் நாம் பத்திரிக்கையினை நிதி பிரச்சனை இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியும்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
28.5.25
0 Comments