மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் பில்கள் சம்பந்தமாக தமிழ் மாநில CGMமுடன் பேட்டி - AIBDPA
தமிழ் மாநில நிர்வாகிகள் சந்திப்பு
September 20, 2022
மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் பில்கள் சம்பந்தமாக தமிழ் மாநில CGMமுடன் பேட்டி – AIBDPA மாநில நிர்வாகிகள் சந்திப்பு – 20-9-2022
தோழர்களே, நம்முடைய தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மெடிக்கல் பில் பட்டுவாடா செய்வதற்கான உத்தரவுகள் வந்து மத்திய மாநில மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் நம்முடைய தொடர் தலையீட்டின் காரணமாக பல மாவட்டங்களில் பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.
பல மாவட்டங்களில் பலனடைந்தோர் தாமாக முன்வந்து நம் சங்கத்திற்கு நன்கொடை கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இது மேலும் நம்மை உற்சாகப்படுத்தும் செயலாக உள்ளது.
தோழர்களே, பிரச்சனை இத்துடன் முடியவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் பிரச்சனைகள் தொடர்கின்றன.
ஆகவே நாம் 13.9.2022 அன்று நிர்வாகத்திற்கு பிரச்சனைகளை முன்வைத்து கடிதம் கொடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் CGM திரு C. V. வினோத் அவர்களோடு இன்று பேட்டி நடைபெற்றது.
இந்த பேட்டியில் நமது சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா ஆகியோர் கலந்து கொண்டோம்.
நிர்வாகத்தின் சார்பில் PGM HR திரு சுப்ரதா சட்டர்ஜி, DGM HR திரு. K. ரமேஷ், AGM Welfare திரு. J. குமார், CAO பைனான்ஸ் திரு சீனிவாச ராகவன் ஆகியோரும் பங்கேற்றனர்.
நாம் முன்வைத்த பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாக விவாதிக்கப்பட்டன. சிஜிஎம் அவர்கள் நம்முடைய கோரிக்கைகளின் நியாயத்தை மிக சரியாக புரிந்து கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தோடு பேட்டி நடைபெற்றது.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேட்டியில் கீழ் காணும் விஷயங்கள் இறுதி படுத்தப்பட்டுள்ளன.
1) 2019 20 அலவன்ஸ்கள் பல மாவட்டங்களில் பட்டுவாடா செய்யப்படாதவை சுட்டிக் காட்டியதில், அவற்றிற்கு மாநில நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு மூன்றாண்டுகளுக்கும் மெடிக்கல் அளவில் பட்டுவாடா செய்யப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
2) வி ஆர் எஸ் இல் சென்றவர்களுக்கு வெண்டர் கோடு உருவாக்குவதில் உள்ள பிரச்சனைகளை மாநில நிர்வாகத்திற்கு அனுப்பினால் தீர்வு காணப்படும் .
3) Indoor மற்றும் அவுட்டோர் மெடிக்கல் பில்கள் முழுமையாக பட்டுவாடா செய்யப்படும். நிதி பற்றாக்குறை இருப்பின் மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகத்திற்கு தெரிவித்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
4) மெடிக்கல் பில் பேமெண்ட்களை வெளிப்படை தன்மையுடன் வெளியிடுவதில் நமது கோரிக்கையினுடைய நியாயத்தை உணர்ந்து, இதற்காக இலாகா பூர்வமான நடவடிக்கை எடுப்பதாக ( Circle Intranetல் வெளியிடுவது) உறுதி அளித்துள்ளது.
5) கடந்த முறை வங்கி கணக்கு பிரச்சனையின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ள மெடிக்கல் பில்களை சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்கள் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் .
6) மாவட்ட, மாநில மட்டத்தில் பென்ஷன் தாரர்களின் குறைகளை கேட்டறியவும், தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒரு நோடல் அதிகாரி போடப்படுவார் என CGM உறுதி அளித்துள்ளார். இதனை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
7) மாவட்டங்களில் Empanelled hospitals இறுதிபடுத்துவது துரிதப்படுத்தப்படும்.
தோழர்களே மேலும் கோவையில் இரண்டு ஆண்டு காலம் மெடிக்கல் பில்கள் காணாமல் போனதாக சொல்லப்படுவதையும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .
தோழர் அங்கு ராஜ் (கோவை) நீண்டகால மெடிக்கல் பில் நிலுவையில் உள்ளதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது கடிதத்தை கொடுத்திருக்கிறோம். தஞ்சை தோழர் ரமணன் அவர்களின் இன்கிரிமெண்ட் ஃபிக்சேசன் பிரச்சனையையும் குறிப்பிட்டு இருக்கிறோம். இந்த பிரச்சனைகளையும் கவனிப்பதாக சிஜிஎம் கூறியுள்ளார்.
தோழர்களே CGM அவர்களை மாநில சங்கத்தின் சார்பாக நாம் சால்வை அணிவித்து கௌரவித்தோம்.
0 Comments