AIBDPA நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளைக் கூட்டம்
July 12, 2022
சிறப்பாக நடைபெற்ற AIBDPA நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் கிளைக் கூட்டம்
மிகவும் சிறப்பாக நடைபெற்ற அம்பை கிளையின் கூட்டம்.
AIBDPA அம்பாசமுத்திரம் கிளையின் கூட்டம் 12-07-2022 அன்று மாவட்ட உதவித் தலைவர் தோழர் C.சுவாமிகுருநாதன் அவர்கள் இல்லத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர் P.முருகன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்,கிளைச் செயலர் தோழர். S. P. கணேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கிளைக் கூட்டத்தை துவக்கிவைத்து மாவட்ட செயலாளர் தோழர். S. முத்துசாமி துவக்க உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் தோழர். M. கனகமணி மற்றும் மாவட்ட உதவித் தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தலமட்டப் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்ததோடு மாநிலச் சங்கத்தின் உதவியுடன் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்டச் செயலாளர் உறுதி அளித்தார்.
20.7.2022 அன்று நெல்லை GM அலுவலகத்தில் வைத்து நடைபெறும் தர்ணாவிற்கு அனைத்துத் தோழர்களையும் திரட்டி சக்திமிக்கதாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கிளை உதவித் தலைவர் தோழர் S.சண்முகம் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் SKC கொடுத்து மகிழ்ந்தார். அனைவராலும் அவருக்கு மனதாரப் பாராட்டுதல் தெரிவிக்கப் பட்டது.
நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர் V.கல்யாணி அவர்கள் நன்றி கூறினார்.
0 Comments